Saturday, January 11, 2014

குரு நம்மை எப்படி மாற்றுவார் ?

வெட்டுக்கிளி தாவித்தாவிச்செல்லும்  இயல்பைஉடையது பிள்ளைப்  பூசசியோ தொடர்ந்து பறக்க இயலாதது, ஆகவே  இவைகள் ஒரு இலக்கை அடைய விரும்பினாலும் அதை  அடைவதற்கு சற்றே சிரமமும் கால தாமதமும் ஏற்படுகிறது இதை போன்றதே இறைவனை அடையவிரும்பும் ஒரு பக்தனின் நிலையும்கூட,    இடைவிடா முயற்சியே வெற்றியை கொடுக்கும்  மேற்கூறிய வெட்டுகிலியோ இடைவெளிவிட்டு இடைவெளிவிட்டு தாவகூடியது , பில்லைப்பூச்சியோ தொடர்ந்து பறக்கமுடியாமல் நடப்பதையே பிரதானமாகக்கொண்டது  இவைகள் பறக்கவேண்டும் தொடர்ந்து பறக்கவேண்டும்    இயல்பை   மீறி பறக்கவேண்டும் முடியுமா? முடியும் குரு நினைத்தால் முடியும்.,

                 ஒரு உதவி இயக்குனர் ஆகவேண்டுமென்றால் இயக்குனரை இடைவிடாமல் வேலைகேட்டு  தொடரவேண்டும் 

                 ஒரு பணிக்குச்சென்றாலும்கூட  பணியில் நிரந்தரமாகவேண்டுமென்றால்  இடைவிடாது   வேலைக்குச்செல்ல வேண்டும் 

                  அவ்வளவு ஏன் தனது காதலியின் மனதை கவர வேண்டுமாணாளும்கூட  இடைவிடாது       அவளை  தினமும் சந்தித்து அவள் மனம் கவரவேண்டும் நான்குநாள் இடைவெளி விட்டாலும்  நடுவில் ஒருவன் புகுந்து அவள் மனம் கவர்ந்து சென்றுவிடுவான்,  பகவான்  
ஸ்ரீ இராமகிருஷ்ண   பரமஹம்சர்    இறைவனை வணங்குவது இடைவிடாத என்னை ஒழுக்கைப்போன்றிருக்கவேண்டும் அப்படி ஒருவன் தியாநித்தாநேயானால் அவன் மூன்று தினங்களில் இறைவனைக்காணலாம்' என்கிறார் 

                   இப்படி இடை விடாமல் பறப்பதெப்படி? அப்போதுதான் குலவியைப்போன்று குரு அங்கே வருகிறார் [குருவென்பவர் நம் கவண்த்திற்கு வருகிறார்] அவரிடம் சரண் புகுந்தால் அவர் நம்மை லாவகமாகத்தூக்கிச்சென்று குலவி எப்படி வெட்டுக்கிளியையும், பில்லைப்பூச்சியையும்   கொட்டி கொட்டி தன்னைப்போன்ற திடமாய், தீர்க்கமாய், இடைவிடாது பறக்கும்படி செய்கின்றதோ அதுபோல மாற்றுகிறார் 

 நம்மை சீடனாய் ஏற்ற குரு என்ன செய்வார்?

குலவியின்  ரீங்காரமாய் குருவின் மந்திர உபதேசம்' அருணகிரிநாதன் என்ற சீடருக்கு குருவாய் வந்த முருகன் சொன்னதுபோல் 'சொல்லற சும்மா இரு' என்பதே நாம் செய்யவேண்டியதெல்லாம் எதையுமே செய்யக்கூடாது என்பதைத்தான் செய்யவேண்டும்,

                   நாம் ஒரு நோயாளியைப்போன்று இருக்கவேண்டும் குருவே மருத்துவராக செயல்படுவார், மயக்க மருந்தை தரவேண்டுமா கூடாதா என்பதையும் மருத்துவரே முடிவு செய்வார்  என்னால் வலி பொறுக்கமுடியவில்லை  எனக்கு மயக்க மருந்தை கொடுங்கலென்றால் பிள்ளைதான் பெறுவதெப்படி இதுவரை பட்ட கஷ்டம் வீன்போகுமன்றோ?

                    சீடனாவதும் எளிதானதல்ல ஒரு சிற்பி பத்து கல்லைப்பார்த்து அதில் ஒன்றையே இது சிலை செய்யத்தகுதியானதென தீர்மானிக்கிறார் அதில் உளியையும் சுத்தியலையும் கொண்டு அடித்து சிலை வடித்துமுடித்த பின்னரே அவை கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது பிறகு அதற்கு பால் அபிஷேகமென்ன தேன் அபிஷேகமென்ன ஆனால்  அந்த பத்தில் ஒன்றாய் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கல்லும் உளியின் செதுக்களை சகிக்கமுடியாமல் உடைந்துபோனால் அது சிலை அல்ல வெறும் கல் கடைசியில் அது கட்டிடம் கட்டவும் உதவாமல் போய்விடும் ஆகவே குருவை நெருங்கும்வரை எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகலாம் குருவாய் ஒருவரை ஏற்றபின் கட்டுப்பாடு அவசியம், நெருப்பாரும், மயிர்ப்பாலமும் இங்கிருந்தே தொடங்குகிறது,  
சும்மா இருப்பது எளிதல்ல ஆனால் நாம் சும்மா இருந்துவிட்டால் போதும் மற்றனைத்தும் குரு பார்த்துக்கொள்வார்,
                   
                   கடைசியில் பில்லைப்பூச்சி குலவி ஆவதைப்போல் அறிவீளியாக  இருப்போறை தன்னைப்போல் அறிவாளியாக்குவார் குரு என்பது திண்ணம்.


.

Wednesday, October 12, 2011

குரு வாழக்கற்றுத்தருவாரா? நாங்கள் வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றோம் 

ஆம் நாம் வாழ்துகொண்டுதான் இருக்கின்றோம் 
இல்லை அவ்வாறு நினைத்துக்கொண்டு இருக்கின்றோம். 

"அதோ போறான் பார்ரா அவன் வாழதுதாண்டா வாழ்க்கை நாம வாழதெல்லாம் ஒரு வாழ்க்கையாடா"
இப்படி யாராவது சொல்லி நீங்கள் கேட்டிருக்கலாம், எப்படிப்பட்டவர் இதைப்போல கூரி இருப்பாரென்றால் வாழ்க்கையில் நொந்தவர், தனது வாழ்க்கை சரியில்லை என உணர்தவர், உணர்ந்து அந்த உண்மையைத்        தெரிந்தவர். 
நாம் அந்த உண்மையைத் தெரிந்து கொண்டாலும் தெரியாமலிருந்தாலும் உண்மை என்பது அதுதானே. 

சர் ஐசக் நியுடன் புவியீர்ப்பு விசையைக்கண்டு பிடித்தார், அப்படியென்றால் அவர் கண்டுபிடிப்பதற்கு முன்னாள் புவியீர்ப்பு விசை இல்லாமலா இருந்தது. இல்லை அதை நாம் அறியாமலிருந்தோம், அதுபோலத்தான் நாம் சரிவர வாழவில்லை என்பதையும் அறியாது வாழ்கிறோம். 

அப்படியெனில் நாம் வாழ்க்கை என நினைப்பது? 
ஒரு கிணற்றில் வாழும் தவளை, இந்த கிணறுதான் உலகம் என்றும் இதில் உள்ள நீரே கடல் என்றும், இதற்குமேல் ஒன்றுமே இல்லை என்பதாக எண்ணி வாழ்கிறது. ஏனெனில் அது வெளியுலகத்தை அறிந்திருக்கவில்லை என்பதே காரணம், அதுபோல உண்மையான வாழ்க்கை என்ன என்பதை அறியாதவரையில் நாம் வாழ்வதே சரியான வாழ்க்கை என எண்ணுவது இயல்பு.,

சென்றவனைக்கேட்டால் வந்துவிடு என்பான் 
வந்தவனைக்கேட்டால் சென்றுவிடு என்பான் 
                                                                - கவியரசு கண்ணதாசன் 

நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையைப்பற்றிய கருத்துக்கள் வெவ்வேறாகவே இருந்துகொண்டிருக்கின்றது,
வாழ்க்கையைப்பற்றிய நமது பார்வை எப்படிப்பட்டது ?
     
ஒரு கதை;
     
(உங்களுக்கும் தெரிந்திருக்கும்,)
பார்வையற்ற நால்வர் யானையைத்தொட்டுப்பார்த்து யானையின் உருவத்தை தெரிந்துகொண்டார்கலாம் 
வாளைத்தொட்டவன் யானை கயிறுபோல் உள்ளது என நினைத்தானாம், காலைத் தொட்டவன் யானை தூணைப்போல உள்ளது என நினைத்தானாம்,  துதிக்கையைத்தொட்டவன் யானை உலக்கையைப்போல் உள்ளது என நினைத்தானாம் தந்தத்தைத்தொட்டுப்பார்த்தவன் யானை பளிங்குபோல உள்ளது என என்னினானாம், அதைப்போன்றதுதான் வாழ்க்கையைப்பற்றிய நமது எண்ணங்களும்,
        

கடவுள் ஒருநாள் உலகைக்கான தனியே வந்தாராம் 
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம் 

ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான் 
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்

படைத்தவனோ உடனே சிரித்துவிட்டான்
                                                           - கவியரசு கண்ணதாசன்

படைத்தவன் ஏன் சிரிக்கின்றான் 

உண்மை என்பது ஒன்றுதான், அதை அறிவதில் நமக்குள் ஏன் இந்த மாறுபாடு, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏன் இந்த வேறுபாடு ஏனெனில் பொய் ஒரே எண்ணிக்கையில் இருப்பதில்லை,

வேலை விஷயமாய் வெளியூர் வந்த நேரத்தில் வீட்டிலிருந்து அவசர அழைப்பு, அதில் பதட்டத்துடன் பேசும் தாய், நீ உடனே புறப்பட்டு வீட்டுக்கு வா நா......... மேற்க்கொண்டு பேசுவதற்குள் அலைவரிசை கிடைக்காததால் அலை பேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது, மீண்டும் முயற்சி செய்தாலும் தொடர்பு கிடைக்கவில்லை, இவரது மனதில் என்ன ஓடும் 

உடல் நலம் சரி இல்லாத தந்தைக்கு என்ன ஆனதோ..........?
கல்லூரிக்குபோன மகள் திரும்பி வந்தாலோ இல்லையோ .............?
கொபக்காரமனைவி யாருடன் சண்டை போட்டாலோ .............?
இதுதானா இல்லை இன்னும் இருக்கின்றதா? அது அவரவர் சூழ்நிலையைப் பொறுத்தது இவர் மனம் எவ்வளவு வரிசைப்படுத்தினாலும் உண்மை என்னவோ ஒன்றுதான், வாழ்க்கையைப்பற்றிய அனுமானம் நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாகவும், ஒருவருக்கே வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறாக தோற்றமளித்தாலும் அவை ஒன்றுமே உண்மையல்ல.,

ஒரு காதலன் தன காதலியிடம் கூறுகின்றான்,
         நீதான் என் வாழ்க்கை நீ இல்லையேல் எனக்கு 
வாழ்க்கையே இல்லை
         மற்றொருவன் கூறுகிறான் பணம்தான் வாழ்க்கை பணம் இல்லாமல் எப்படி வாழ்வது 
         இன்னும் ஒருவர் மானத்தை விட்டு உயிர் வாழ்வதைவிட இறப்பதே மேல் (இப்படிப்பட்டவர்கள் இன்றைய கலாச்சார சூழலில் குறைந்துவிட்டார்கள் என்பதுவேறு)
          ஆன்மீக நூல்கள் நிறையப்படித்த சகோதரர் ஒருவரிடம் கேட்டேன் 
வாழ்க்கை என்றால் என்னவென்று அதற்க்கு அவர் கூறினார் 'அனுபவம்தான் வாழ்க்கை' ஆக நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் வாழ்க்கையைப்பார்த்துக்கொண்டிருக்கின்றோம், 

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டதே வாழ்க்கை என்பார்கள், உண்மைதான் ஆனால் அதை நாம் மேலும் நுணுக்கமாக சிந்தித்தாக வேண்டும், ஒரு ஆட்டையோ, மாட்டையோ அல்லது நாயையோ பார்த்து அதன் வாழ்க்கை இப்படி உள்ளது இதன் வாழ்க்கை அப்படி உள்ளது என நாம் எண்ணுவதோ கூறுவதோ கிடையாது.
அப்படி இருந்தால்வேண்டுமானால் நாம் பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்டதே வாழ்க்கை எனலாம். வாழ்க்கை என்பது வாழும் வகை, ஒருவேளை வாழும் வகை மருவி வாழ்க்கையாகி இருக்கலாம், ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு வாழும் வகை தெரியாது, பசி எடுக்கிறதா உண்ணும், காமம் எழுகிறதா கலவி கொள்ளும், உறக்கம் வருகிறதா உறங்கும். னெனில் அவை ஐந்தறிவு ஜீவன்கள் அதற்க்கு வாழ்வதை வகைப்படுத்தத்தெரியாது, ஆனால் ஆறறிவு கொண்ட மனிதனும் வாழ்வை வகைப்படுத்தாமல் வாழ்வது ஆறறிவுகொண்ட மிருகம் என்றே கூறலாம், உண்மையில் குரங்கிலிருந்து பரினமித்தவனே மனிதன் அவன் ஆறறிவு இருந்தும் அதைப்பயன்படுத்தாமல், வாழ்வை வகைப்படுத்தாமல் வாழ்வதை விஞ்ஞான மிருகம் என்றே கூறலாம்,  (Planet of the Apes திரைப்படத்தில் வரும் மனிதக்குரங்கைப்போல........) இப்படியேப்போனால் மனிதனிலிருந்து மீண்டும் குரங்காக பரிணமிக்கலாம்,.... இது எங்கே கொண்டுபோய்விடும் அழிவிற்கு மனித இனத்தின் அழிவிற்கு அதில் நீங்களும் இவனும் அடக்கம். இப்படி மிருகமாகவும் மாறும் வாய்ப்புள்ள நம்மை ஒரு முழு மனிதனாகவோ அல்லது கடவுளாகவோ வாழ நமக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுப்பார், வாழக்கற்றுக்கொடுப்பார் அவரே குரு.


அப்படியென்றால் வாழ்க்கைதான் என்ன? 
கவிஞர்  கண்ணதாசன் வரிகளில் 
வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் 
வாசல்தோரும் வேதனை இருக்கும், என்றார் 
ஆயிரம் என்னும் எண்ணிக்கையை அவர் உருதிபடக்கூரவில்லை
தோராயமானவார்த்தைதான் அது. அது ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படலாமேயன்றி எண்ணிக்கை ஒன்றும்
குறைந்துவிடப்போவதில்லை, 

Tuesday, August 23, 2011

குரு என்ன தருவார் ?




குரு கற்றுத்தருவார்,

ஒரு சிறிய கதை: 
ஒருவன் கடும் பசியோடு ஆற்றோரமாய்ச் சென்று கொண்டிருந்தான் அங்கு ஒரு பெரியவர் மீன் பிடித்துக்கொண்டிருந்தார் அவரிடம் சென்றவன் "ஐயா நான் பெரும் பசியில் உள்ளேன் எனக்கு சில மீன்கள் தந்தீர்களானால் நான் பசியாருவேன் என்றான்" அதற்கு அந்த பெரியவரோ "நான் தரும் இந்த மீன்கள் உன்னுடைய ஒரு வேலை பசியை மட்டுமே தீர்க்கும் சில மணிநேரம் கழித்து பசி எனும் பிணி உன்னை விரட்டும் ஆகவே உனக்கு நான் மீன் பிடிக்க கற்றுத்தருகின்றேன் இதைக்கொண்டு நீ உன் கடைசி நாள்வரை சங்கடமின்றி வாழலாம்" என பெரியவர் மீன்பிடிக்கக் கற்றுத்தந்தார்,

அதுபோல....


அன்பான மனைவி இருந்தும் அவள் அருமை தெரியாமல்......... 
அழகான வாரிசு இருந்தும் அதை சரியாக வளர்க்க முடியாமல்........... 
முத்தான கல்வி இருந்தும் அதில் முனைப்பு இல்லாமல்..........
சிறப்பான வேலை இருந்தும் அதில் சிறக்கத்தெரியாமல்.............
வார்த்தை இருந்தும் அதை வடிக்கத்தெரியாமல்..........
தன்னுள் திறமை இருந்தும் அதை திறக்கத்தெரியாமல்.......... 
மாடிருந்தும், காடிருந்தும், வீடிருந்தும், உலக விஷயமிருந்தும்.........
எல்லாம் தன்னிடம் இருந்தாலும், இல்லாமல் போனாலும்,
நிம்மதியை என்கோத  தேடித்தேடி தெரியாமல்..........

மொத்தத்தில்..........
வாழத்தெரியாதவர்களுக்கு வாழ கற்றுக்கொடுப்பார். 


அவரே குரு 

Tuesday, August 16, 2011

குருவே சரணம்

“மீன் குட்டிக்கு  நீந்த கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை” ஏணெனில் அவை இயற்கையோடு ஒன்றி வாழ்கின்றன. அவை மட்டுமல்ல மனிதனைத் தவிர ஏணைய அனைத்து ஜீவராசிகளும் இயற்கையோடு இயற்கையாகவே வாழ்கின்றன அவைகளுக்கு ஒரு குரு அவசியமில்லாமல் இருக்கலாம், ஆனால் ஐந்து அறிவு மட்டுமில்லாமல் ஆறாவது அறிவும் கொண்ட மனிதனுக்கு குரு மிகவும் அவசியம்.

காரணம்
1.   எந்த ஒரு விஷயத்திலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு அதுபோல் இந்த உலக சமுதாய நன்மை பொருட்டு எதையும் சாதிக்கும் அபரிமிதமான ஆற்றல் படைத்த மனிதனின் ஆறவது அறிவு அதற்கு  நேர் எதிரான இந்த உலகை அழிக்கும் செயலையும் செய்யும். பரந்த சிந்தனையாக உலகைப்பற்றி சிந்திக்கிரமோ  இல்லையோ குருகிய சிந்தனையாக நம்மைப்பற்றி  நம் குடும்பத்தைப் பற்றியேனும் நாம் சிந்தித்தாக வேண்டும். ஆக நம் குடும்பம் வளமோடும் நிம்மதியோடும் பிரச்சினை இல்லாமல் வாழ நம்மை வழி காட்டி அழைத்துச்செல்லும் குரு  நமக்கு தேவை.
2.   ஒரு குழந்தை இந்த உலகில் ஜனிக்கிறது (நீங்கலோ அல்லது நானோ) அந்தக் குழந்தைக்கு இந்த உலகில் யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் இருந்தால் என்னவாகும், அப்படி  இருந்திருந்தால் இன்று உங்களுடைய நிலைமையோ, என்னுடைய நிலைமையோ என்னவாக இருந்திருக்கும், தாயோ தந்தையோ அண்ண்னோ, தம்பியோ, ஆசிரியரோ தெரிந்தவரோ தெரியாதவரோ இதுவரையில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ நம்மை வழி நடத்தி அழைத்து வந்துள்ளனர்.  இதில் யார் எப்போது வருவார் யார் எப்போது துணை இருப்பார் என்பது யாருக்கும் தெரியாது. மேலும் நம்மை வழி  நடத்த  நம்மை விட விஷயம்  நன்கு அறிந்தவரே தேவை.  ஆலை இல்லாத ஊறுக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதை போல, குரு இல்லாத குறைக்காக நம் சுற்றத்தார் நமக்கு வழிகாட்டி உதவி இருக்கிறார்கள்.  நம் வீட்டில் மின் விளக்கு பழுதடைந்தால் தற்காலிகமாய் மெழுகை ஏற்றுவோம். ஆனால் மெழுகையே  நம்பி வாழ்ந்திடாமல் மின் விளக்கை சரி செய்வது போல்,    நம் குருவை தேர்ந்தெடுத்து அவர் வழி நடப்பது உத்தமம்.

Sunday, July 17, 2011

குருவே சரணம்
 உலகில் உருவமாய் இருந்து வழிகாட்டிய வடபழனி ஐயா,
அருவமாய் எங்கள் உள்ளத்தில் அமர்ந்து வழிக்காட்ட,
பிண்டத்திலிருந்து விடுபட்டு வி
ரிந்து அண்டம் முழுதும் பரவி,
எங்களோடு சேர்த்து உங்களையும் ஆட்கொள்ள
ஊனக்கண்களால் மட்டுமே காணும் எங்கள் சிற்றறிவிர்க்கும்
ஞான விருட்சமான எங்கள் குரு
ஆதி அந்தமில்லா
ச் சிவனாக எங்கும் பரவி இருக்கின்றேன் என
உணர்த்தி விஸ்வரூபம் எடுத்த நாள் இந்நாள்.

17-07-2011
ஞாயிற்றுக்கிழமை அன்று குரு ஹோரையில்
காலை: 01:23