குரு கற்றுத்தருவார்,
ஒரு சிறிய கதை:
ஒருவன் கடும் பசியோடு ஆற்றோரமாய்ச் சென்று கொண்டிருந்தான் அங்கு ஒரு பெரியவர் மீன் பிடித்துக்கொண்டிருந்தார் அவரிடம் சென்றவன் "ஐயா நான் பெரும் பசியில் உள்ளேன் எனக்கு சில மீன்கள் தந்தீர்களானால் நான் பசியாருவேன் என்றான்" அதற்கு அந்த பெரியவரோ "நான் தரும் இந்த மீன்கள் உன்னுடைய ஒரு வேலை பசியை மட்டுமே தீர்க்கும் சில மணிநேரம் கழித்து பசி எனும் பிணி உன்னை விரட்டும் ஆகவே உனக்கு நான் மீன் பிடிக்க கற்றுத்தருகின்றேன் இதைக்கொண்டு நீ உன் கடைசி நாள்வரை சங்கடமின்றி வாழலாம்" என பெரியவர் மீன்பிடிக்கக் கற்றுத்தந்தார்,
அதுபோல....
அன்பான மனைவி இருந்தும் அவள் அருமை தெரியாமல்.........
அழகான வாரிசு இருந்தும் அதை சரியாக வளர்க்க முடியாமல்...........
முத்தான கல்வி இருந்தும் அதில் முனைப்பு இல்லாமல்..........
சிறப்பான வேலை இருந்தும் அதில் சிறக்கத்தெரியாமல்.............
வார்த்தை இருந்தும் அதை வடிக்கத்தெரியாமல்..........
தன்னுள் திறமை இருந்தும் அதை திறக்கத்தெரியாமல்..........
மாடிருந்தும், காடிருந்தும், வீடிருந்தும், உலக விஷயமிருந்தும்.........
எல்லாம் தன்னிடம் இருந்தாலும், இல்லாமல் போனாலும்,
நிம்மதியை என்கோத தேடித்தேடி தெரியாமல்..........
மொத்தத்தில்..........
அவரே குரு